வடக்கு
முள்ளிவாய்க்கால் மண்ணிலே இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025 - 07:15 PM -

0

முள்ளிவாய்க்கால் மண்ணிலே இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் மண்ணிலே இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதில் இன்று காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே தன்னுடைய மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்த தந்தையொருவர் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர் 

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தினர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05