May 21, 2025 - 06:38 PM -
0
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று (21) நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் திரு. பெரியசாமி முத்துலிங்கம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சர்வதேச தேயிலை தினத்தையொட்டி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமான (ISD) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலையக பெருத்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட பல்வேறு உரிமை சார் விடயங்களை உள்ளடக்கி தமது கோரிக்கைகற் அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து இந்த நிகழ்வுக்கான பொது கூட்டம் நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
--