May 22, 2025 - 01:01 PM -
0
இலங்கையின் மிகப்பெரிய பால் சேகரிப்பு நிறுவனமும், பாலுற்பத்தித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமுமான Pelwatte Dairy Industries Ltd, தொழில்துறையில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் முன்னோக்கிப் பயணித்து வருகிறது. இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவைக் காண்பதை வலுப்படுத்துவதிலும் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்துவருகிறது. சந்தையில் ஒரு மேலாதிக்க சக்தியாகத் திகழ்ந்து வரும் Pelwatte Dairy Industries, உற்பத்தி உட்கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு புத்தாக்கங்களில் தொடர்ச்சியான முதலீடுகள் மூலமாக இலங்கையில் நுகர்வோருக்கு உயர்தர பாலுற்பத்திப் பொருட்களை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உத்வேகத்தை அத்திவாரமாகக் கொண்டு, நுகர்வோர் மத்தியில் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்நிறுவனம் பல்வேறு வகையான புதிய தயாரிப்பு பொதியிடல் அளவுகளை அறிமுகப்படுத்த உள்ளது. குருணாகல் மாவட்டத்தில் இப்பாகமுவவில் உள்ள அதிநவீன புதிய பால் பதப்படுத்தும் ஆலையில் ரூபா. 3.1 பில்லியன் முதலீட்டின் மூலம் இந்த விரிவாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இந்தப் புதிய தொழிற்சாலை, பாற்பொருள் உற்பத்திச் செயன்முறை தொழில்நுட்பத்தில் அதிநவீன முன்னேற்றங்களை ஒருங்கிணைக்கும் நவீன உட்கட்டமைப்பைக் கொண்ட, சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் சார்ந்த செயற்திட்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலை முழுமையான மற்றும் அரைவாசி தானியங்கி செயலாக்க இயந்திரத்தொகுதிகளை உள்ளடக்கியிருக்கும். இது சுகாதாரத் தராதரங்களுடன் நிலைபேற்றியல், செயல்திறன் மற்றும் உயர் தரத்தை உறுதி செய்யும். மனித தலையீட்டைக் குறைக்கும் வகையில் தன்னியக்கமயமாக்கல் மூலம், உற்பத்தித் திறன் கணிசமான அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் மூலமாக, உற்பத்தியின் அளவு மற்றும் தயாரிப்பு தரம் ஆகியனவும் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அதியுயர் தராதரங்களைப் பேணுவதற்கு, அதிநவீன கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு பிரத்தியேக, விரிவான தர உத்தரவாத மற்றும் சோதனை கட்டமைப்பு நடைமுறையில் இருக்கும். சூரிய மின்வலு கட்டமைப்புக்களை உள்வாங்கி இது முழுமையாக நிலைபேற்றியல் கொண்டதாக அமைவதுடன், பசுமை பேணும்
கட்டடங்களுக்கான சான்று தராதரங்களுக்கு இணங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டு, காபன் உமிழ்வை பூச்சியமாக்க வேண்டும் என ஆவலை நிறைவேற்றும் முயற்சியை முன்னெடுத்து, உலகளாவிய சூழல், நிலைபேற்றியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்த தர ஒப்பீட்டு நியமங்களுடன் ஒன்றியுள்ளது. தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் அபிலாஷைகள் மீதும் இந்த உற்பத்தி ஆலை கவனம் செலுத்தவுள்ளதுடன், எந்தவொரு வெளிநாட்டு கணக்காய்வு அல்லது மதிப்பீட்டுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில், சர்வதேச பாற்பொருள் தராதரங்களுடன் முழுமையாக ஒன்றியுள்ளது. Pelwatte Dairy Industries நிலைபேற்றியல் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, எரிசக்தி திறன் மற்றும் சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வை மனதில் கொண்டு இந்த தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை தண்ணீர் மீள்சுழற்சிக் கட்டமைப்புகள், கழிவு முகாமைத்துவத் தீர்வுகள் மற்றும் எரிசக்தித் திறன் கொண்ட உற்பத்திச் செயன்முறை தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அடிச்சுவட்டைக் குறைப்பதை உறுதி செய்யும்.
வெப்பநிலைக் கட்டுப்பாட்டுச் சங்கிலி மற்றும் சேமிப்பு கட்டமைப்புகள் தயாரிப்புக்களின் புத்துணர்ச்சியை மேம்படுத்துவதற்கும், பாவனைக் காலத்தை நீட்டிப்பதற்கும், வழங்கல் ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும் வகையில் மேம்படுத்தப்பட்டு, உயர்மட்ட தராதரங்களைப் பேணும் அதே வேளையில், அதிகரித்துச் செல்லும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனத்தின் திறனையும் வலுப்படுத்துகின்றன.
இந்த தொழிற்சாலை ஸ்மார்ட் தொழிற்சாலையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, டிஜிட்டல் கண்காணிப்பு கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இது நிகழ்நேர உற்பத்தி கண்காணிப்பு, முன்கணிப்புடனான பேணல் மற்றும் மேம்பட்ட அளவில் தீர்மானம் வகுக்கும் திறன்களுக்கு இடமளிக்கிறது. இந்த டிஜிட்டல் ஒருங்கிணைப்புகள், செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதிலும் இடைவிடாத உற்பத்தி செயல்முறைகளை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், பணியாளர் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலியல் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட பணியிட வடிவமைப்பு, பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் நெறிமுறைகள் மற்றும் மனிதரீதியான உழைப்பு தேவைகளைக் குறைக்க தன்னியக்கமயமாக்கம் சார்ந்த கையாளுதல் கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் பரிமாண மாற்றம் கண்டு வரும் நுகர்வோர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் தனது தயாரிப்பு வரிசையை இந்த தொழிற்சாலை பல்வகைப்படுத்துகிறது. புதிய ஆலையானது, சுவையூட்டப்பட்ட பால், குடிக்கத் தயாராகவுள்ள (RTD) பானங்கள், செறிவூட்டப்பட்ட பால், பால் கலவைகள், சீஸ், திரவ பால், RTD - பழச்சாறுகள் ஆகியவற்றின் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பு வரிசையை உற்பத்தி செய்ய இடமளிக்கும். இது நிறுவனத்தின் சந்தை இருப்பை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்யும் திறனையும் மேம்படுத்துகிறது. இந்த ஆலை சர்வதேச உணவு பாதுகாப்பு தராதரங்களுடன் முழுமையாக இணங்கும் என்பதுடன், அனைத்து தயாரிப்புகளும் உள்ளூர் ஒழுங்குமுறை தேவைப்பாடுகள் மற்றும் சர்வதேச தர நிமயங்களுடன் ஒன்றியுள்ளதை உறுதி செய்கிறது.
ஆரம்பத்தில், இப்புதிய ஆலை தினமும் 50,000 முதல் 80,000 லீட்டர் பாலை உற்பத்திச் செயன்முறைக்கு உட்படுத்தும் என்பதுடன், வடமேற்கு மாகாணத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் நேரடியாகப் பெறப்படும். மேலும் முழுமையான ஆற்றல் 300,000 லீட்டராக மேம்படுத்தப்படும். இந்த விரிவாக்கம் உள்ளூர் கொள்முதல் வலையமைப்புகளை வலுப்படுத்தும் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருமான உறுதிப்பாட்டை வழங்கும் என்றும், வளர்ந்து வரும் சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க இடமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பால் விநியோகத்தில் அதன் நேரடி தாக்கத்திற்கு அப்பால், இந்த ஆலை 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்கள் மற்றும் 200 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளை தோற்றுவிக்கும் என்றும், இது பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை 2026 ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், Pelwatte Dairy Industries நிறுவனத்தை இலங்கையின் பாலுற்பத்தித் துறையில் முன்னணியில் நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.
Pelwatte Dairy Industries நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்கிரமநாயக்க அவர்கள் இது தொடர்பில் கூறுகையில், “இலங்கையின் பாலுற்பத்தித் துறை நீண்ட காலமாக வெளிப்புற விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்துள்ளது, ஆனால் உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்துவதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முதலீடு வெறுமனே உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது, இது நமது பாலுற்பத்தியாளர்கள் வளர்ச்சிக்கான ஸ்திரத்தன்மையைக் கொண்டிருப்பதையும், நுகர்வோர் உள்ளூரில் பெறப்படும் பாலுற்பத்தியை நம்பியிருப்பதையும், இந்தத் தொழில் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக மாறுவதையும் உறுதி செய்வதாகும். குருணாகல் ஆலை அந்த தூரநோக்குடனான இலக்கின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நீண்டகால வளர்ச்சிக்கு உந்துசக்தியளிப்பதற்கு தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகளை ஒன்றிணைக்கிறது, என்று குறிப்பிட்டார்.
2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Pelwatte Dairy Industries நிறுவனம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், இறக்குமதியில் தங்கியிருப்பதைக் குறைத்தல் மற்றும் இலங்கையின் பாலுற்பத்தித் துறையில் நிலைபேற்றியலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய முதலீடு, இத்துறையின் வளர்ச்சியை வழிநடத்தும் அதன் தூரநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாற் பொருட்கள் நாட்டின் உணவுப் பொருளாதாரத்தின் அத்திவாரமாக தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.