May 22, 2025 - 01:03 PM -
0
NDB வங்கியானது உண்மையான பண்டிகை உணர்வில் நடைபெறும் பாடசாலையின் துடிப்பான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கொழும்பு ஆனந்தா கல்லூரியுடன்பங்குடைமை மேற்கொள்வதில் பெருமை கொள்கிறது.இந்த பங்குடைமையானது ஆரம்பகால நிதியியல் கல்வியறிவு, பொறுப்பான சேமிப்புப் பழக்கம் மற்றும் டிஜிட்டல் வங்கி விழிப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் இலங்கை இளைஞர்களை மேம்படுத்துவதற்கான NDB வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வானது NDB வங்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஒன்றிணைவதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. அதுமட்டுமன்றி இந்த நிகழ்வு, 13 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் முன்னோடி டிஜிட்டல் வங்கி தீர்வான NDB Pixel ஐ அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பையும் வழங்கியது. இளம் வயதிலிருந்தே ஸ்மார்ட் பண முகாமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட NDB Pixel கணக்கானது,பதின்ம வயதினர் NEOS மொபைல் வங்கி செயலி மற்றும் வர்த்தகநாம மதிப்புடைய டெபிட் அட்டைக்கான அணுகல் உள்ளிட்ட உண்மையான வங்கி கருவிகள் மூலம் தனிப்பட்ட நிதிக்கான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
NDB Pixel கணக்கானது பெற்றோருக்குமன அமைதியை வழங்குவதுடன் கணக்கு மேற்பார்வை திறன்கள், SMS அறிவுறுத்தல்கள் மற்றும் அவர்களின் பிள்ளையின் வங்கிச் செயல்பாட்டின் நிகழ்நேரத் தெரிவுநிலை ஆகியவற்றைக் கொண்டதாக திகழ்கிறது. இந்த அம்சங்கள் நிதிப் பொறுப்பை வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல், பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே பகிரப்பட்ட கற்றல் அனுபவத்தை ஊக்குவிப்பதுடன் இது நீண்டகால நிதியியல் ஒழுக்கத்திற்கான களத்தை அமைக்கிறது.
ஆனந்தா கல்லூரியின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் NDB இன் இருப்பானது பாரம்பரியத்திற்கும் நவீன வங்கிக்கும் இடையிலான அர்த்தபூர்வமான பாலமாக செயல்பட்டது. NDB வங்கியானது முன்னோக்கிச் சிந்திக்கும் அணுகுமுறை மற்றும் NDB Pixel போன்ற தயாரிப்புகளுடன், வகுப்பறை முதல் உண்மையான உலகம் வரை நிதியியல் ரீதியாக அதிகாரம் பெற்ற இலங்கையர்களின் அடுத்த தலைமுறையை ஆதரிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.