வடக்கு
போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது

May 24, 2025 - 10:02 AM -

0

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டனர். 

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05