May 24, 2025 - 02:50 PM -
0
பிரபல நடிகையான கிரண் தனது மார்பிங் வீடியோ இணையதளத்தில் பரவி வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை கிரண். ஜெமினி, வின்னர், தென்னவன் என்று பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த கிரண், மார்க்கெட் குறைந்த பின்னர் ஆம்பள, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்தார்.
இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக உள்ள கிரண், சில வருடங்கள் முன்னதாக சப்ஸ்க்ரைபர் ஒன்லி ப்ளான்களையும் அறிமுகம் செய்தார். அவருடைய எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள், வீடியோ சாட்டிற்கு பெருமளவு கட்டணத்தை வசூலித்தார்.
இந்நிலையில், தற்போது நடிகை கிரண் சைபர் க்ரைம் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மார்பிங் செய்யப்பட்ட போலி ஆபாச வீடியோக்களை சிலர் தயாரித்து இணையத்தில் பரப்பி வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும் தனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் மற்றும் ஷேர் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.