May 25, 2025 - 08:01 AM -
0
ஜப்பானை பின்தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் நீதி ஆயோக் நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
புது டெல்லியில் நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக சபை கூட்டம் குறித்து அவா் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த புவி அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார மதிப்பு தற்போது 4 ட்ரில்லியன் டொலராக உள்ளது.
பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜொ்மனி ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயரும் என்றாா்.