Jun 9, 2025 - 02:01 PM -
0
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 6 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குன்யா நோய் ஏற்பட்டதையடுத்து, இன்று (9) பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளால் இன்று அப்பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
--