Jun 15, 2025 - 11:43 AM -
0
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராக உள்ளார். சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டார்.
ஆனால் பேச்சுவார்த்தை நீடித்ததில் அவர் எதற்காக இந்த நேரத்தில் தொடர்பு கொண்டார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.
அதற்கேற்றார்போல்தான் அந்த இளைஞரும் பேசினார். அப்போது அந்த இளைஞர் திடீரென அவரிடம் உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று கூறினார்.
முதலில் அந்த இளைஞர் வேலை தேடுவது போல் தனது பயோ டேட்டா விவரங்களை எல்லாம் அதில் பதிவு செய்துள்ளார்.
பெண்கள் இதேபோல் சபல இளைஞர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டார்.
அப்போது அந்த இளைஞர் நான் மது குடித்து இருந்ததாகவும் இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரினார்.