இந்தியா
நடிகையின் மகன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை

Jul 4, 2025 - 03:17 PM -

0

நடிகையின் மகன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கண்டிவலி பகுதியில், இந்தி மற்றும் குஜராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கும் முன்னணி நடிகை ஒருவர், 51-ஆவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

 

இவரது 14ஆவது வயது மகன் பாடசாலையில் படித்து வந்துள்ளான். நேற்றிரவு 7 மணியளவில் நடிகை, தனது மகனிடம் தனியார் வகுப்பிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். 

 

ஆனால் அவரது மகன் தனியார் வகுப்பிற்கு செல்ல தயங்கியுள்ளான். பலமுறை தாய் வற்புறுத்தியதால், வீட்டில் இருந்து வெளியேறியுள்ளான். 

 

51ஆவது மாடியில் இருந்து, 50ஆவது மாடிக்கு இறங்கி வந்த அவன், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். மகன் தனியார் வகுப்பிற்கு சென்றுவிட்டான் என நடிகை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், காவலாளி நடந்த சம்பவத்தை அவரிடம் சொல்லியுள்ளார்.

 

நடிகை வந்து பார்க்கும்போது மகன் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தார். பொலிஸார் இதனை தற்செயலான மரணமாக பதிவு செய்துள்ளனர்.எந்தவொரு சந்தேகத்திற்குரிய அம்சமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தாலும், இது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05