Jul 18, 2025 - 10:51 AM -
0
2023-24 நிதியாண்டில் பிசிசிஐ (BCCI) 9,741.7 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பிசிசிஐக்கு தங்க முட்டையிடும் வாத்தாக உள்ளது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த வீரர்களும் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் 2008 முதல் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுகள் குவிகின்றன.
2023-24 நிதியாண்டில் பிசிசிஐயின் மொத்த வருமானத்தில் ஐபிஎல் தொடர் மட்டும் ரூ.5,761 கோடியை (59.1%) பங்களித்துள்ளது.
மேலும், ஐபிஎல் அல்லாத இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமைகள் மூலம் ரூ.361 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
‘ரிடிப்யூஷன்’ (Rediffusion) விளம்பர நிறுவனத்தின் தலைவர் சந்தீப் கோயல் கூறுகையில், “பிசிசிஐ இன்னும் தனது முழு ஆற்றலை உணரவில்லை. ஐபிஎல் மட்டுமின்றி, உள்ளூர் தொடர்களான ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை ஆகியவற்றையும் விளம்பரப்படுத்தி வருமானத்தைப் பெருக்க முடியும்,” என்றார்.
மேலும், பிசிசிஐயிடம் தற்போது சுமார் ரூ.30,000 கோடி வைப்பு நிதியாக உள்ளது, இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி வட்டி வருமானம் கிடைக்கிறது.
இது எதிர்காலத்தில் 10-12% வரை உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது வருமானம் ஈட்டுவதில் தடுமாறுவதால், அவர்களின் நிதி ஆதாரமாகவும் பிசிசிஐ உள்ளது.