செய்திகள்
21 இந்திய பிரஜைகள் கைது

Jul 18, 2025 - 08:37 PM -

0

 21 இந்திய பிரஜைகள் கைது

இணையவழி சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள் இன்று (18) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான பின்னரும் கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்து இந்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்தக் குழுவைக் கண்டறிந்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05