Nov 7, 2025 - 08:38 AM -
0
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

