Dec 16, 2025 - 05:39 PM -
0
இன்று (16) மாலை 5.00 மணியளவில் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க எதிர்பார்ப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் செக்கனுக்கு 500 கன அடி நீரை கவுடுல்ல ஓயாவிற்கு விடுவிக்க எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ள நிலைமை ஏற்படாது என்றாலும், தாழ்நிலப் பகுதிகளைப் பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

