Dec 18, 2025 - 10:04 AM -
0
வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று இன்று (18) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி விவசாய நிலத்துள் பாய்ந்த சம்பவம் ஒன்று சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக காவு வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--

