Dec 18, 2025 - 01:02 PM -
0
கரூர் துயரத்திற்குப் பிறகு
செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், அவரது சொந்த மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
தவெக தலைவர் விஜய் பேசுகையில், 'பொதுவாக நல்ல காரியங்கள் ஆரம்பிக்கும்முன் மஞ்சளைக் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். நம் வீட்டில் கூட நம் குடும்பப் பெண்கள் நமக்காக மஞ்சள் புடவை கட்டிக்கொண்டுதான் வேண்டிக்கொள்வார்கள். நம் கொடியிலும் மஞ்சள் இருக்கிறது. அப்படி மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. இங்கு வந்து மஞ்சளை பற்றி பேசாமல் வேறு எங்கு பேசுவது. ஈரோடு விவசாயத்திற்கு பெயர்போன மண். விவசாயத்திற்கு கவசமாக இருப்பது காளிங்கராயன் அணை. காளிங்கராயன் கால்வாய். அந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவர் சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய், மகனே காளிங்கா தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது. மோர் விற்ற காசு இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சென்று கால்வாய் வெட்டு என்றாராம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்திற்கு இணையாக வேறு எதுவும் இல்லை. அதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியும். அப்படி ஒரு தைரியம் தான் நீங்கள் கொடுக்கிறீர்கள்.
இதை எப்படி கெடுக்கலாம்,. எப்படி பிரிக்கலாம்.. விஜய் மேல் சூழ்ச்சிகளை செய்து எப்படி மக்களை நம்பவைக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. இது இன்று நேற்று வந்த உறவில்லை. இது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலான உறவு. அதனால் நீங்கள் என்ன செய்தாலும் இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்.
காலிங்கராயன் அணை கட்டுவதற்காக பவானி சென்று பார்க்கும்போது ஒரு பாம்பு அங்கு உட்கார்ந்ததாம். அந்த இடத்தில்தான் அணை கட்ட ஆரம்பித்தாராம். அந்த பாம்பு சென்ற இடத்தில்தான் கால்வாய் வெட்டினாராம். சில வாய்மொழிக் கதைகள் சொல்கிறார்கள். தண்ணீர் சேர்த்து வைத்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பது என்பது எவ்வளவு நல்ல விசயம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு கதை சொன்னால் பரவாயில்லை. ஆனால், எதையும் செய்யாமல் கதை மட்டும் சொல்கிறார்கள். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். வள்ளுவர் கோட்டத்தில் காட்டிய அக்கறையை மக்களின் வாழ்வாதாரத்திலும் காட்டலாமே. ஏன் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். அரசாங்கம் நடத்துகிறீர்களா கண்காட்சி நடத்துகிறீர்களா?
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிப்போட்ட சீர்திருத்த நெம்புகோல் பெரியார். அரசியல் சட்டத்திருத்தை மேற்கொள்ள போராட்டம் நடத்தியவர். நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார். அப்போது அண்ணாவும் எம்ஜிஆரும் யார். பெரியாரிடம் இருந்து கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும் எம் ஜி ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை யாரும் எடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குதான் தவெக ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏன் புலம்புகிறீர்கள்.
பெரியாரின் பெயரையும் அவரது கொள்கையையும் பின் தொடருவதாக சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கின்றனர். தயவு செய்து பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்காதீர்கள். பெரியாரின் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள்தான் நம் அரசியல் எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க முடியும். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தார்கள். சொன்னார்களே செய்தார்களா? மஞ்சள் விவசாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ஆனால், அதிலும் ஊழல். கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. தவெகவை எப்படியெல்லாம் முடக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.
விஜய் அரசியல் பேசவில்லை என்கிறார்கள். 10 நிமிடம்தான் பேசுகிறார் என்கிறார்கள்., நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன?
நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்பீர்கள்,. ஓசியில் போகிறீர்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான்.
மக்களுக்கான வாழ்வாதரம் உயருவதற்கான திட்டங்களை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்று சொன்னோம். எப்படி செயல்படுத்துவீர்கள் என்று கேட்கிறார்கள், வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் என்ன திமுகவா? எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் என்றோம். எங்கள் ஆட்சியிலேயே கொடுத்துவிட்டோம் என்கின்றனர். இந்த ஊரில் வாடகைக்கு இருப்பவர்களே இல்லையா? எல்லோரும் டிகிரி படிக்க வேண்டுமென்று சொன்னோம். நாங்களே படிக்கவைத்து விட்டோம் என்கின்றனர். அது உண்மையானால் பள்ளி அளவில் அதிக மாணவர்கள் இடைநிற்பது யாருடைய ஆட்சிக்காலத்தில். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால், அவதூறு பரப்புகிறார்கள். எம்ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள், அதை நானும் சொல்கிறேன், திமுக ஒரு தீயசக்தி.
செங்கோட்டையன் சேர்ந்ததுபோல் பலரும் வந்து சேர இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்' என்றார்.

