Dec 18, 2025 - 06:01 PM -
0
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

