செய்திகள்
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர் மாயம்

Dec 25, 2025 - 09:19 PM -

0

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர் மாயம்

நாட்டைத் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி முதல் அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்: 

தொலைபேசி எண்கள்: 

074 068 4243

070 380 8757

Comments
0

MOST READ
01
02
03
04
05