Dec 29, 2025 - 01:48 PM -
0
யாழ். ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்றது.
நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சு.ரவிராஜ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் விருத்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்வில், ஊடகத்துறைக்கு பணியாற்றியவர்கள் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
--

