Jan 2, 2026 - 04:59 PM -
0
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள் இந்திய மீனவர் பிரச்சனையை முன்வைக்காது காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்தனர்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை என்பது பாரிய பிரச்சனையாகவுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடபகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்த போது இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசவில்லை மாறாக இந்திய தூதரகத்தை உடைக்க வேண்டும் என்று இவர்கள் சொன்னார்கள், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்
இவர் இவருடைய ஆள் போன்ற காட்டிக்கொடுப்பு விடயங்களையே பேசினார்கள் அரசாங்கம் என்ற ரீதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
--

