Header Logo

கிழக்கு
போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!

Jan 6, 2026 - 12:14 PM -

0

போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!

வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்களை, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயினுடன் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வாழைச்சேனையில் இருந்து பேருந்தில் வந்து இறங்கிய குறித்த இரு இளைஞர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழையைச் சேர்ந்த 24 வயதுடையவர் மற்றும் வாகரையைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title