Header Logo

இந்தியா
விசாரணையில் முன்வைக்கப்படும் கிடுக்குப்பிடி கேள்விகள்?

Jan 12, 2026 - 12:49 PM -

0

விசாரணையில் முன்வைக்கப்படும் கிடுக்குப்பிடி கேள்விகள்?

இன்று (12) காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்க திட்டமிட்டுள்ளதால், விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள தெரிவிக்கின்றன. 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு விஜய் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 

இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் காலை 6.20 மணியளவில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். 

இந்த விசாரணையின்போது, 7 மணி நேரம் தாமதமாக பரப்புரை நடைபெற்றது ஏன்? பெருங்கூட்டத்திற்கு மத்தியில் விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி? நெரிசல் எப்படி நடந்தது, பரப்புரை இடத்திலிருந்து வெளியேறியது ஏன்? உள்பட பல்வேறு கிடுக்குப்புடி கேள்விகள் விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணை பல மணிநேரம் நடத்தப்படலாம் என்றும் நாளையும் தொடர வாய்ப்பிருக்கிறது எனவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title