Jan 16, 2026 - 10:10 AM -
0
டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்கிசை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

