கிழக்கு
ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

Jan 18, 2026 - 05:40 PM -

0

ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இன்று (18) ஞாயிற்றுக்கிழமை 61 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றே இவ்வாறு மீட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை பாதுகாப்பாக வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05