Jan 19, 2026 - 01:59 PM -
0
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. 'சி' பிரிவில் பங்களததேஷ், மேற்கிந்திய தீவுகள் அணி, இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.
குரூப் 'பி'-யில் இலங்கை, அவுஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.
பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து பங்களாதேஷ் அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.
மேலும் ஐசிசி குழுவிடம் எங்களை 'சி' பிரிவில் இருந்து 'பி' பிரிவுக்கு மாற்றி விடுங்கள். 'பி' பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதனை நிராகரித்த ஐசிசி பங்களாதேஷ் அணிக்கு காலகெடு விடுவித்துள்ளது. அதன்படி வருகிற 21 ஆம் திகதிக்குள் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடுகிறதா? இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி இந்தியா செல்ல மறுத்தால், பங்களாதேஷிற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி (தற்போதைய ரேங்கிங் அடிப்படையில்) அந்த குரூப்பில் விளையாடும் என ஐசிசி திட்டமிட்டுள்ளது.

