Jan 19, 2026 - 06:53 PM -
0
தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பாடசாலை மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் வாகனம் பல்வேறு ஆரம்பப் பாடசாலைகளை சேர்ந்த மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பாடசாலை சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

