Feb 11, 2026 - 10:53 AM -
0
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சோமாலிய பயணிகள் விமானம் ஒன்று, அந்நாட்டுத் தலைநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், விமானத்தில் பயணித்த 55 பேருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானியின் திறமையான செயற்பாட்டினால் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாகச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் மொகாடிஷுவிலிருந்து புறப்பட்டுச் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஒன்று பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, விமானத்தை உடனடியாகத் தரையிறக்குமாறு சோமாலிய சிவில் விமான சேவைகள் அதிகார சபை அந்தச் சந்தர்ப்பத்தில் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

