Feb 11, 2026 - 11:57 AM -
0
வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது.
குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரங்க வீரரத்தின தலைமையில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, மற்றும் திசாநாயக்க 37348, கீர்த்திரத்தின 48001, குமார 63340, ரத்னசேகர 6762, றெயினோல் 68300, ரணில் 81010, கலாகிரு 85763, குமார 87334, சகரான் 22449, பிரதீஸ் 99695 ஆகியோரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
--

