Feb 22, 2026 - 06:31 AM -
0
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த வரியின் அளவு 15 வீதம் வரை அதிகரிக்கவுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டத்தின்படி, 150 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்கு இவ்வாறு 15 வீதம் வரை வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
நேற்று (21), அமெரிக்க ஜனாதிபதி இந்த வரி வீதம் 10% ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். ட்ரம்பின் வரிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரால் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

