Jun 9, 2025 - 01:53 PM -
0
கண்டி கலஹா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தேர் உற்சவ நிகழ்வு தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைப்பெற்று வருகின்றது.
தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகளை தொடர்ந்து அம்மன் வெளிவீதி எடுத்து செல்லப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது.
இதில் அதிகளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டு விஷேட பூஜைகளில் கலந்துகொண்டு இருந்தனர்.
பக்த அடியார்கள் மஞ்சள் நீராட்டு விழாவில் மஞ்சள் பூசி வழிப்பட்டனர்.
-கண்டி நிருபர் ராஜ்-