Dec 18, 2025 - 06:29 PM -
0
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (18) கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு கட்சியினரால் மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தந்தை செல்வாவின் நினைவிடத்திற்கு சென்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்போது அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

