Header Logo

செய்திகள்
45 கிலோ ஹெரோயினுடன் 5 பேர் கைது!

Nov 19, 2024 - 08:01 AM -

0

45 கிலோ ஹெரோயினுடன் 5 பேர் கைது!

1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்று ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கைக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது, பல நாள் மீன்பிடி படகுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் 23-33 வயதுடைய கந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

 

கடற்படையினர் மீன்பிடி படகினை காலிக்கு கொண்டு வந்து சோதனையிட்ட போது, ​​இரண்டு மூடைகளினுள் 40 பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஹெரோயின் தொகையினை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

 

இதன் எடை 46 கிலோ 116 கிராம் என கடற்படை தெரிவித்துள்ளது.

 

ஹெரோயின் போதைப்பொருள் தொகை, சந்தேகநபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

 
 


 


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title