Jun 9, 2026 - 08:04 PM -
0
காலி மாநகரசபை அதிகாரப் பிரதேசத்திற்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (10) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு குறித்த மாநகரசபை அதிகாரப் பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

