Apr 2, 2025 - 08:07 AM -
0
நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் நிலநடுக்கம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு 'levitating house'அமைப்பை உருவாக்கியுள்ளது. அது சுருக்கமான காற்றைப் பயன்படுத்தி வீடுகளை அவற்றின் அடித்தளத்திலிருந்து சற்று தூக்குகிறது.
சென்சார்கள் அதிர்வுகளைக் கண்டறிந்து வீட்டின் அடியில் ஒரு ஏர்பேக்கைச் செயல்படுத்தி, அதிர்வுகளை உறிஞ்ச சுமார் 3 சென்டி மீட்டர் உயர்த்தி, இந்த கண்டுபிடிப்பு கட்டமைப்பு பாதிப்பைத் தடுக்க உதவுகிறது, நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளுக்கு விலை குறைவான மற்றும் திறமையான தீர்வை வழங்குகிறது.
இந்த நடைமுறை முழுமையாக வெற்றியளிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட் சேதங்களை தவிர்த்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.