இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது.
வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள் தொகை பகுதிகளில் இது சிறிய சேதங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.