May 1, 2025 - 12:06 PM -
0
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.