Header Logo

உலகம்
காசா மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல் - 21 பேர் பலி

Jul 23, 2025 - 04:29 PM -

0

காசா மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல் - 21 பேர் பலி

காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில், காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 21 பேர் பலியாகி உள்ளனர். இதில், வடமேற்கு காசாவில் நடந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட ஒரே வீட்டில் இருந்த 12 பேர் பலியாகி உள்ளனர். காசாவின் வடக்கே தல் அல்-ஹவா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில், கர்ப்பிணி உள்பட 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். 

நாசர் பகுதியில் இருந்த கூடாரத்தின் மீது நடந்த 3ஆவது தாக்குதலில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி தெரிவித்து உள்ளது. ஷிபா வைத்தியசாலையும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இதுபற்றி இஸ்ரேல் இராணுவம் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

கடந்த மே மாதத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் உயிரிழந்து உள்ளனர். போரால் காசாவில் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஞ்சம் ஏற்படும் ஆபத்தும் காணப்படுகிறது. 

100இற்கும் மேற்பட்ட மனித உரிமை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், காசாவுக்கு கூடுதல் உதவி தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதுபற்றிய கடிதம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title