Header Logo

மலையகம்
நாளொன்றுக்கு 2,000 ரூபாய் சம்பள உயர்வு தேவை!

Jul 29, 2025 - 03:04 PM -

0

நாளொன்றுக்கு 2,000 ரூபாய் சம்பள உயர்வு தேவை!

அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது வழங்கப்படுவதாகக் கூறப்படும் 1,700 ரூபாய் கூடப் போதுமானதாக இல்லை. ஆகவே, எமது அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல் ராஜ் தெரிவித்தார்.

 

இன்று (29) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆரம்பகட்டமாக, அவர்களின் ஒத்துழைப்புடன், தற்போதைய பொருளாதார அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாயாவது கிடைக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம்.

 

அரசாங்கம் என்ற வகையில், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக முழுப் பணமும் செலவாகிவிடுமானால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அந்தப் பணம் போதாது.

 

அனைத்து மக்களுக்குமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தோட்டப் பகுதிகளிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் போன்றவை குறித்து பேசி வருகிறோம். சம்பள உயர்வு மட்டுமே மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது.

 

முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசி, அரசு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பது கட்டாயமானதொரு விடயமாகும். தற்போது காணப்படும் தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தோட்டப் பகுதிகளுக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். இது குறித்து பேசவிருப்பதோடு, இதுதொடர்பாக ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title