Header Logo

உலகம்
உக்ரைன் சிறை மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்

Jul 30, 2025 - 07:19 PM -

0

உக்ரைன் சிறை மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்

ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உக்ரைன் மீது போர் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறார். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. 

ரஷ்யாவுக்கு வடகொரியா உதவுகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரை உடனடியாக கைவிட வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளாக போர் தாக்குதல் தொடர்கிறது. 

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனை குறிவைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் அந்த சிறைச்சாலை கட்டிடம் தூள் தூளாக சிதைந்தது. இந்த கோர தாக்குதலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறைச்சாலையில் இருந்து பலர் தாக்குதலை பயன்படுத்தி தப்பியோடினர்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title