சினிமா
கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது

Aug 2, 2025 - 05:15 PM -

0

கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது

71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. 

திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. 

அப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் இந்த விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

இதில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரவணமருது சவுந்தரபாண்டி, தற்போது உயிருடன் இல்லை. 

2023இல் தனது மனைவியுடன் அவர் தகாத உறவில் இருந்ததாக சக்திவேல் என்பவர் அவரது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவண மருதுவைக் கொலை செய்து அவரது உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

2023 ஒக்டோபர் 14ஆம் திகதி வீட்டை விட்டுச் சென்ற சரவண மருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து சந்தேகநபர்களை கைது செய்தனர். 

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் 'லிட்டில் விங்ஸ்'. 

கந்தர்வனின் 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மறைவுக்குப் பிறகு சரவணமருது சவுந்தரபாண்டி சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05