Header Logo

பல்சுவை
இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின்

Aug 17, 2025 - 12:08 PM -

0

இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின்

அபுதாபி - அல் தப்ராவின் வடக்கு பகுதியில் சலாகா தீவில் இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின் தொடர்பில் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. 

இந்த தீவு பகுதியில் உள்ள கடலில் டொல்பின்கள் அதிகளவில் உள்ளன. சமீபத்தில் பெண் டால்பின் குட்டி ஒன்றை ஈன்றது. இந்த குட்டி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. 

இதனால் அந்த தாய் டொல்பின் மிகவும் சோகமடைந்தது. எனினும் என்ன காரணத்துக்காக குட்டி உயிரிழந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. 

அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

குட்டி உயிரிழந்த நிலையில், தாய் டொல்பின் அதனை பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் காணொளியே இதுவாகும். 

அபுதாபி கடல் பகுதியில் அதிகமான டால்பின்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் கடல் பகுதியில் செல்லும் போது பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டொல்பின் அதனை சுற்றி, சுற்றி வந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அந்த காட்சியை அவர்கள் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். 

இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் உயிரிழந்த குட்டியை விட்டு பிரிய முடியாமல் தவித்த தாய் டொல்பினின் பாசப் போராட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title