Header Logo

இந்தியா
டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்! இந்தியாவில் கூறிய புடின்!

Dec 5, 2025 - 08:18 AM -

0

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்! இந்தியாவில் கூறிய புடின்!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி புட்டின், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். 

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தமக்கு பாதகமான அனைத்து சமரசங்களையும் நிராகரிப்பதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார். 

"நாங்கள் டொன்பாஸை பலவந்தமாகப் பெறுவோம். அவ்வாறு நடக்காமல் இருக்க உக்ரைன் இராணுவம் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்" என அவர் கூறினார். 

தற்போது டொன்பாஸில் சுமார் 85% ரஷ்யாவினால் நிர்வகிக்கப்படுவதுடன், அதன் கிழக்குப் பகுதியில் மாத்திரமே உக்ரைன் இராணுவம் நிலைகொண்டுள்ளது. 

எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி தமது நிலத்தை விட்டுக்கொடுப்பதை நிராகரித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title