Header Logo

விளையாட்டு
இடது கையில் நாணயத்தை சுழற்றிய கே.எல் ராஹூல்!

Dec 6, 2025 - 05:51 PM -

0

இடது கையில் நாணயத்தை சுழற்றிய கே.எல் ராஹூல்!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (6) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. 

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் - டிகொக் ஆகியோர்களமிறங்கினர். 

இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். 

இதனையடுத்து டி காக் கேப்டன் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 

அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். பவுமா 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டிகொக் சதம் அடித்து அசத்தினார். 

அவர் 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பிரேவிஸ் 29 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பாடவுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைய ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளது. 

2023 ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச உலக கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து 20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது அணித் தலைவர் கே.எல் ராஹூல் தமது இடது கையினால் நாணயத்தை சுழற்றி வெற்றி பெற்றார். 

இது மோனி மோர்க்கல் வழங்கிய ஆலோசனை என தெரிவிக்கப்படுகின்றது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title