Header Logo
Mogo Academy

பல்சுவை
கள்ளக்காதலால் கணவனுக்கு நேர்ந்த கதி!

Feb 25, 2026 - 05:20 PM -

0

கள்ளக்காதலால் கணவனுக்கு நேர்ந்த கதி!
Mobitel inner

பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார். 

இந்தியாவின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32) . மதுபானக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி (26). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 12 ஆம் திகதி குளத்துப்பட்டியில் வீதியோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

விசாரணையில் அபிராமிக்கும் அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி பிரபு அபிராமி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரபாகரனை கொலை செய்ய மனைவி அபிராமி மற்றும் பிரபு திட்டமிட்டனர். அதன்படி கடந்த 12 ஆம் திகதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பிரபுவின் நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்துள்ளனர். 

பின்னர் ஃபுல் மப்பில் இருந்த அவரை மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மரத்தடியில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரபு நண்பர்களை தேடி வருகின்றனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara