Mar 3, 2026 - 09:59 PM -
0
மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
தற்போது நிலவும் மத்திய கிழக்கு மோதல்களால் உக்ரைனின் நட்பு நாடுகளின் கவனம் திசைதிரும்பும் அபாயம் உள்ளதாகவும், இது ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதை மறக்கச் செய்யக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, தனது நாட்டின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதில் இனிவரும் காலங்களில் சிரமங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் நெருக்கடியானது ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாக அமையும் என்றும், அது ஒரு நீண்ட போராக உருவெடுக்காது என்று தான் எதிர்பார்ப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.