Header Logo

செய்திகள்
ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்: உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

Mar 3, 2026 - 09:59 PM -

0

ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்: உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

 

தற்போது நிலவும் மத்திய கிழக்கு மோதல்களால் உக்ரைனின் நட்பு நாடுகளின் கவனம் திசைதிரும்பும் அபாயம் உள்ளதாகவும், இது ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதை மறக்கச் செய்யக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, தனது நாட்டின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதில் இனிவரும் காலங்களில் சிரமங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், ஈரான் நெருக்கடியானது ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாக அமையும் என்றும், அது ஒரு நீண்ட போராக உருவெடுக்காது என்று தான் எதிர்பார்ப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title