Mar 23, 2026 - 03:50 PM -
0
இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது.
இதில் இந்திய பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் இருந்து இந்த மோதல் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகிறோம்.
மேற்காசியாவில் உள்ள தொடர்புடைய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன். பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஒவ்வொருவரையும் வலியுறுத்தி வருகிறேன்.
பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
வர்த்தக கப்பல்களை தாக்குவது, ஹோர்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்றமை் அவர் மேலும் கூறினார்.
