Apr 25, 2026 - 11:31 AM -
0
30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பார்வையிட்டார்.
யுத்தத்தின் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையில் காணப்படுகின்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான யோசனையினை புதிய அரசாங்கம் முன் வைத்துள்ளது.
கடந்த 07 ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினர் சீமெந்து தொழிற்சாலையை பார்வையிடனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (25) தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பார்வையிட்டு இதனை கைத்தொழில் மையமாக மாற்றி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
தொழிற்சாலையை கைத்தொழில் வலயமாக மாற்றுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவாந்தராஜா தனது கருத்தினை தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் ஜெ.ராஜீவன், ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
--
