Apr 25, 2026 - 03:34 PM -
0
தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த இன்று (25) கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஆனையிரவு பகுதியில் குறிஞ்சா தீவின் முன்னை காலம் போன்று உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வந்த குறிஞ்சாதீவு பகுதியையும் அமைச்சர் பார்வையிட்டதுடன், இப்பகுதியை மீண்டும் உப்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளதாகவும் இதன் பொருட்டு பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய வகையில் பலரது வாழ்வாதாரத்தை மேன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமாண பணிகளை பார்வையிட்டார். அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், க.இளங்குமரன், தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர், பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் தலைவர், முதலீட்டு சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
--
