Jul 30, 2026 - 01:41 PM -
0
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் முதலீட்டுச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையையும் சௌகரியமான அனுபவத்தையும் வழங்கும் நோக்கில், புதிதாகப் புனரமைக்கப்பட்ட தனது நீர்கொழும்புக் கிளையைத் திறந்து வைத்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட சேவைத் தரங்கள், நவீன உள்ளக வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமான சூழல் ஆகியவற்றின் ஊடாக உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. நிறுவனத்தின் சிறப்பாகச் செயல்படும் கிளைகளில் ஒன்றாகத் திகழும் இக்கிளையின் புனரமைப்பானது, தனது வாடிக்கையாளர் தொடர்பு மையங்களை வலுப்படுத்துவதிலும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தடையற்ற, மேம்பட்ட சேவை அனுபவத்தை வழங்குவதிலும் First Capitalஇன் தொடர்ச்சியான முதலீட்டைக் குறிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட இக் கிளையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கும் நோக்கில் விரிவாக்கப்பட்ட குழுவும் இங்கு இடம்பெற்றுள்ளது. இது, வாடிக்கையாளர்கள் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கவும், மேம்பட்ட நிதி நல்வாழ்வு மற்றும் நிதி முகாமைத்துவத்தை நோக்கிய அவர்களின் பயணத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.
