Jul 9, 2025 - 05:20 PM -
0
தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகோடா இன்று (09) காலை இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தார்.
கடற்படை தளபதியை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் புத்திக பியசிறி வரவேற்றார், மேலும் விமானப்படை வண்ணப் பிரிவால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் கடற்படை தளபதி ஆகியோறுக்கு இடையே ஒரு சுமுகமான உரையாடல் நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது கூட்டு கடல்சார் பாதுகாப்பு பயிற்சிகளைத் திட்டமிடுதல் மற்றும் கடற்படை - விமானப்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்கள் அடங்கும். அதன் பின்னர் இரு தரப்பினரும் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுப் சின்னங்கள் பரிமாரப்பட்டன.
இதன்போது விமானப்படைத் தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.